முதல்வர் விரைவில் வீடு திரும்புவார்... அமைச்சர் துரைமுருகன் தகவல்!

 
துரைமுருகன்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைப்பயிற்சியின் போது ஏற்பட்ட லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவமனை நிர்வாகத்தின் தகவலின்படி, முதலமைச்சரின் உடல்நலம் தற்போது சீராக உள்ளது. முதல்வர் இரு தினங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்டாலின்

இந்த சம்பவத்தை அறிந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று முதலமைச்சரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தனர். முதலமைச்சரின் உடல்நலம் முழுமையாக தேறியவுடன், அவர் தனது பணிகளை வழக்கம் போல தொடருவார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பேசுகையில், "முதல்வர் ஸ்டாலின் நலமாக இருக்கிறார். அவர் விரைவில் வீடு திரும்புவார். அவருக்கு ஒன்றும் ஆகவில்லை அவர் மிகவும் நலமாகத் தான் இருக்கிறார். இன்று மாலை கூட அவர் வீடு திரும்ப வாய்ப்புகள் இருக்கிறது" என்று உறுதியளித்தார். 

ஸ்டாலின் தமிழக அரசு

அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், முதலமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் திருப்திகரமாக உள்ளதாகவும், அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?