அதிர்ச்சி வீடியோ... அடுக்குமாடி குடியிருப்பில் பால்கனியில் தவறி விழுந்து அந்தரத்தில் தொங்கிய குழந்தை!
சென்னை போரூரில் அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரையில் இருந்து ஒரு குழந்தை தவறி விழுந்து பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை மீட்பதற்காக குடியிருப்புவாசிகள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். மேற்கூரையின் விளிம்பில் சிக்கிய குழந்தை எந்நேரமும் கீழே விழுவது போல் இருந்தது.
🔴LIVE : அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழும் குழந்தை- சிசிடிவியால் பரபரப்பு https://t.co/fzgFqkieJc
— Thanthi TV (@ThanthiTV) April 28, 2024
குழந்தையை காப்பாற்றுவதற்காக மேற்கூரையில் கீழே குடியிருப்புவாசிகள் ஒன்றுகூடி பெரிய போர்வை ஒன்றை கையில் விரித்து பிடித்துக்கொண்டே இருந்தனர்
அப்போது பக்கத்துவீட்டை சேர்ந்த நபர் ஒருவர், ஜன்னல் வழியாக ஏறி தனது உயிரை பணயம் வைத்து கிழே விழவிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டுவிட்டார். அவருக்கு மற்றொரு நபர் உதவி செய்ய தானாக முன்வந்தார். மக்கள் ஒன்றுகூடி குழந்தையை மீட்க போராடிய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!