அறுந்து தொங்கிய மின்சார கேபிள் ... டூவீலரில் சென்ற தம்பதி உடல் கருகி பலி.. மகன் கண் முன்னே சோகம்!

 
பாப்பாத்தி
 

மதுரை டிவிஎஸ் நகர் துரைசாமி சாலையில் வசித்து வந்தவர் 50 வயது முருகேசன்.  இவரது மனைவி பாப்பாத்தி  . இவர்கள்  அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தனர். நேற்றிரவு பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கடையை பூட்டிவிட்டு இருவரும் வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டனர். அவர்களை பின்தொடர்ந்து அவர்களின் மகனும் சைக்கிளில் சென்றுள்ளார்.

மின்சாரம்
 
பலத்த காற்று வீசிய போது அப்பகுதியில் மின்சார வயர் அறுந்து தொங்கியுள்ளது. இதை முன்னாள் சைக்கிளில் சென்ற மகன் பார்த்து பெற்றோரிடம் கூறவந்த சில நொடிகளில், கவனிக்காமல் பைக்கில் வந்த அவர்கள் மீது மின்சார வயர் பட்டதில், இருவரும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆம்புலன்ஸ்

இதனை பார்த்த மகன் கூச்சலிட்ட நிலையில், அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த சுப்பிரமணியபுரம் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
விபத்து நடந்த பகுதியில் தெருவிளக்கு நீண்ட நாள்களாக எரியவில்லை என பலமுறை மாநகராட்சியில் புகாரளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காததால் அந்தப் பகுதி முழுவதிலும் இருள் சூழ்ந்திருந்ததால், மின்சார வயர் அறுந்து விழுந்தது தெரியாமல் தம்பதியினர் உயிரிழந்ததாக... அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web