அரியலூரில் பரபரப்பு... ஆடு மேய்த்த பெண்ணை கடித்து குதறிய முதலை!

 
சின்னம்மா

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியை அப்பகுதியில் சுற்றித்திரிந்த முதலை பலமாக தாக்கி கடித்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது நடுக்கஞ்சன்கொல்லை கிராமம். இங்குள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் பெரும்பாலான மக்கள் கால்நடைகளை மேய்த்து வந்தனர்.

அந்த வகையில் நேற்று (சனிக்கிழமை) அப்பகுதியை சேர்ந்த வைத்தியநாதன் என்பவரது மனைவி சின்னம்மா (70) ஆடுகளை மேய்ச்சலுக்கு சென்றார். அப்போது, ஆற்றங்கரையில் உள்ள புதருக்குள் ஓய்வெடுப்பதற்காக படுத்திருந்த முதலை, திடீரென முன்னோக்கி பாய்ந்து வந்து மூதாட்டியின் காலை கடித்ததில், காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியை முதலை கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web