பொண்டாட்டின்னு கூட பார்க்கலை... ஜோடியா தான் கிளம்பினாங்க... ஆனா நடுரோட்டுல புருஷன் செய்த கொடூரம்!

 
ரோஷன்

சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே நேற்று மதியம் தன்னுடன் வந்த இளம்பெண்ணை இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் தாக்கினார். அந்த பெண் மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி சத்தம் போட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வீடியோவில் பதிவான இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது பழைய வண்ணார்பேட்டையை சேர்ந்த ரோஷன் (25) என்பவர் இளம்பெண்ணை தாக்கியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரோஷன் மீது ஏற்கனவே வண்ணாரப்பட் மற்றும் மாங்காடு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ஐந்து மாதங்களுக்கு முன், ரோஷன், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சந்தியா (21) என்பவரை திருமணம் செய்து கொண்டு, நேற்று மதியம், கே.கே.நகரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றது தெரியவந்தது. மேலும் இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த மனைவி சந்தியாவை சந்தேகத்தின் பேரில் ரோஷன் தாக்கியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ரோஷன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ், ஆபாசமாக பேசியதுடன், ரோஷன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web