தாயை கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்த மகள்.. பகீர் பின்னணி !!

 
செனாலி சென்

அண்மைக்காலமாக காதலி, மனைவி, தோழியை உடலை துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்யும் கொடூரம் நடந்து வருகிறது. டெல்லி, கேரளா, மத்திய பிரதேசம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்த நிலையில், கர்நாடகாவில் நடந்த கொடூர கொலை நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செனாலி சென் (39), என்ற பெண் 70 வயதான தாயார் பீவா பாலுடன் வசித்து வந்தார். தாய் , மகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.


இதனால் இருவரும் அதிகமாக பேசிக்கொள்வதும் இல்லை. மேலும் தகராறு தொடர்ந்ததால் இதற்கு தீர்வுகட்ட மகள் செனாலி சென் முடிவு செய்தார். இந்த முறை சண்டையின் போது அவரது தாயார் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி இருக்கிறார். இதனால் சண்டை  நீடிக்கவில்லை.

எனினும், ஆத்திரத்தில் இருந்த செனாலி தனது தாயாருக்கு 20 தூக்க மாத்திரைகளை ஊட்டிவிட்டுள்ளார். சிறிது நேரத்துக்கு பிறகு, அவரது தாய் வயிற்று வலியால் அலறித் துடித்துள்ளார். மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லாமல், வலியால் கத்தியதை பார்த்து மேலும் ஆத்திரம் அடைந்த செனாலி தனது தாயின் கழுத்தை நெரித்து துடிதுடித்து கொலை செய்துள்ளார்.

செனாலி சென்

பிறகு தாயாரின் சடலத்தை, வீட்டில் இருந்த சூட்கேசில் அடைத்து, நேராக லேஅவுட் காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். தனது தாயாரை கொலை செய்துவிட்டதாகவும், இந்த சூட்கேசில்தான் அடைத்து வைத்துள்ளதாகவும் கூறினார். போலீசார் சூட்கேசை திறந்து பார்த்தது பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடலை மருத்துவமனைக்கு அனுபிவைத்த போலீசார் செனாலி சென்னிடம் விசாரணை நடத்தினர். தாயை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web