மருத்துவர் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்து தானும் தற்கொலை!

 
டாக்டர் சீனிவாஸ்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் டாக்டர் சீனிவாஸ் (40). இவர் தனது மனைவி உஷா ராணி (38), ஒரு மகன், ஒரு மகள் மற்றும் தாய் ரமணம்மா (70) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று டாக்டர் சீனிவாஸ் உள்பட அவரது குடும்பத்தினர் 5 பேர் வீட்டில் பிணமாக கிடந்தனர். டாக்டர் சீனிவாஸ் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். மற்ற 4 பேர் கழுத்து நரம்பு வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.

அதன்பின், போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விஜயவாடா கிழக்கு டி.சி.பி. எலும்பியல் நிபுணரான டாக்டர் சீனிவாஸ், தனது குடும்ப உறுப்பினர்களைக் கொன்றுவிட்டு, பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அதிராஜ் சிங் ராணா கூறினார். இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை இரவு நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

டாக்டர் சீனிவாஸ் கடந்த சில நாட்களாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாகவும், சமீபத்தில் தனது மருத்துவமனையை விற்றுவிட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. முன்னதாக திங்கட்கிழமை இரவு, டாக்டர் சீனிவாஸ் தனது கார் சாவியை பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்து, அவரது முழு குடும்பமும் வெளியே செல்வதாகவும், கார் சாவியை அவரது சகோதரரிடம் ஒப்படைக்குமாறும் கூறினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் கொலை, தற்கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!