பேருந்துக்கு அடியில் படுத்து தூங்கிய ஓட்டுனர்... தலை நசுங்கி பலியான சோகம்...!

 
கருப்பசாமி

 கோவை மாவட்டம் காளப்பட்டி காட்டூர் வீதியில் வசித்து வருபவர் 25 வயதான கருப்பசாமி. இவர்   தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணி புரிந்து வந்தார்.
இவர் நேற்றுமுன் தினம் காலை பேரூரில் இருந்து பீளமேடு பாலிடெக்னிக் வரை செல்லும் தனியார் பேருந்தை ஓட்டிச் சென்றார். அன்றைய தினம்  இரவு 9.30 மணிக்கு  பேரூர் - சிறுவாணி சாலையில் உள்ள பச்சாபாளையம் அருகே தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில்  பேருந்தை நிறுத்தினார். அங்கு மேலும் 2 தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருந்தன.

பேருந்து விபத்து

இரவு பேருந்துகளை நிறுத்தியதும், அந்த தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் வழக்கம் போல அங்கேயே படுத்து தூங்கத் தொடங்கினர்.  இதில் ஓட்டுனர்  கருப்பசாமி தான் ஓட்டி வந்த தனியார் பேருந்தின் கீழே பாய் விரித்து படுத்து தூங்கிவிட்டார்.  நேற்று காலையில் பணிக்கு செல்வதற்காக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் எழுந்து கிளம்பினர்.  அவருடன் பணிபுரிந்த சக பணியாளர்கள்  கருப்பசாமியும் எழுந்து விட்டதாக நினைத்தனர். அவர் பேருந்திற்கு அடியிலேயே   தூங்கியதாக தெரிகிறது. சக  தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் குளித்து தயாராகி  கிளம்பி கொண்டிருந்தனர். காலை 6.10 மணிக்கு  கருப்பசாமி ஓட்டும் தனியார் பேருந்தை நேற்று ஓட்ட வேண்டிய மற்றொரு ஓட்டுநரான சூர்யா என்பவர் அங்கு வந்தார். அப்போது அந்த பேருந்தின் நடத்துநர் மகேஷ்குமார் தன்னிடம் இருந்த டிக்கெட்டுகளை சரிபார்த்துக் கொண்டு இருந்தார்.

ஆம்புலன்ஸ்

இந்நிலையில் ஓட்டுநர் சூர்யா, பேருந்திற்கு கீழே கருப்பசாமி படுத்து இருப்பதை கவனிக்காமல் பேருந்தை முன்னோக்கி செலுத்தினார்.  பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய கருப்பசாமி  தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பேரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  ஓட்டுநர் சூர்யாவை  காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கருப்பசாமிக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web