ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பேருந்து.. 15 பேர் படுகாயம்!

 
பேருந்து விபத்து

கள்ளக்குறிச்சியில் இருந்து திருமண நிகழ்ச்சிக்காக நேற்று (மே 13) இரவு கன்னியாகுமரிக்கு தனியார் பஸ்சில் 45 பேர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்த தனியார் பஸ்சை சின்னசேலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்தார். இன்று (மே 14) அதிகாலை 5.30 மணியளவில் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி, திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, ஓட்டுநர் மணிகண்டனின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர்பாராதவிதமாக 20 அடி பள்ளத்தில் விழுந்து, அங்குள்ள கிணறு பகுதியின் தடுப்பணையில் மோதியது. இந்நிலையில், அதில் பயணம் செய்த முகிலன் (13), அண்ணாமலை (58), சக்திவேல் (53), வேலாயுதம் மனைவி மின்னல் கொடி (33), விக்னேஷ் மனைவி அனுசியா (27) உள்பட 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web