போதைப்பொருள் கடத்தல் வழக்கு... நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்!
சென்னையில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்த வழக்கில் மன்சூர் அலிகான் மகன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி முகப்பேர் மேற்கு பகுதியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக 5 கல்லூரி மாணவர்களை ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்திருந்தனர்.
போலீசாரின் விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்குக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரை டிசம்பர் 4ம் தேதி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அலிகான் துக்ளக் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பாக நடந்தது. காவல்துறை தரப்பில், கைதான அலிகான் துக்ளக்கிடமிருந்து எந்த போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை. கைதான மற்ற நபர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் அவர் கைது செய்யப்பட்டார் என கூறப்பட்டது.
இதனையடுத்து ” அலிகான் துக்ளக் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் தினமும் காலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என நீதிபதி நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!