சொத்துக்காக அண்ணன் கொலை... சகோதரி, மகன் உட்பட 8 பேர் அதிரடி கைது!

 
அழகி

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (55). இவர், மாடுகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கண்ணன் உடலில் படுகாயங்களுடன் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் தூக்கில் சடலமாக தொங்கினார்.

இதனை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த போலீசார கண்ணனின் உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர். இதில், கண்ணன் அவரது நெருங்கிய உறவினர்களால் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் அம்பலமானது. 

அழகி

இதைத் தொடர்ந்து கண்ணனின் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், இறந்த கண்ணனின் சகோதரி அழகி, அவரது கணவர் சின்னக்காளை, மகன் அழகர்சாமி, கண்ணனின் தம்பி முருகன், அவரது மனைவி வெள்ளையம்மாள், மகன்கள் சதீஸ்குமார், குணா மற்றும் உறவினர்கள் நாச்சம்மாள், வெள்ளைச்சாமி ஆகிய 9 பேரும் சேர்ந்து கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதாவது, 2.5 ஏக்கர் சொத்துக்காக ஏற்பட்ட தகராறில் இவர்கள் கண்ணனை கொலை செய்துள்ளனர். இதனை மறைக்க அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாட இறந்தவரை தோட்டத்து மரத்தில் தூக்கில் தொங்க விட்டதும் தெரியவந்தது.

அழகி

இதனை அடுத்து அவர்கள் 9 பேரையும் கைது செய்த சாணார்பட்டி போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web