நெஞ்சை பதற வைக்கும் வீடியோ... காரை விட்டு இறங்கி கடலில் குதித்த இன்ஞினியர்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருபவர் 38 வயது சீனிவாசன் குரு தூரி . இவர் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மும்பை அடல் சேது பாலத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நடுவழியில் காரை நிறுத்தி கீழே இறங்கினார். அதன்பின் திடீரென கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
महाराष्ट्र : मुंबई में 38 वर्षीय इंजीनियर श्रीनिवासन कुरुतुरी ने अटल सेतु से समुद्र में कूदकर आत्महत्या कर ली। वो आर्थिक रूप से परेशान थे। अभी बॉडी रिकवर नहीं हो पाई है।
— Sachin Gupta (@SachinGuptaUP) July 25, 2024
⚠️Disturbing Visual⚠️ pic.twitter.com/l1u4Zn19RI
காரைவிட்டு இறங்கி கண்ணிமைக்கும் நேரத்தில் கடலில் குதித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அவர் கடலில் குதிக்க செல்வதை வீடியோ எடுத்த நபர்களில் ஒருவராவது அவரை காப்பாற்ற முயற்சித்திருக்கலாம் எனக் கூறுகின்றனர். சீனிவாசன் குருதூரி கடுமையான நிதி நெருக்கடியில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அவருடைய உடல் இன்னும் மீட்கப்படவில்லை. மீட்பு படையினர் தொடர்ந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!