சென்னையில் பரபரப்பு... துப்புரவு பணியாளர் லாரி மோதி மரணம்... கதறியழுத சக பணியாளர்கள்!

 
சிவகாமி

இன்று அதிகாலை சென்னையில் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்து கொண்டிருந்த போது, அந்த வழியே வந்து கொண்டிருந்த கார் மோதி கீழே விழுந்த பெண் தூய்மைப் பணியாளர் மீது கண நேரத்தில் லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த சிவகாமி(45 ) என்பவர், சென்னை மாநகராட்சியில் 180வது வார்டில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இன்று அதிகாலை திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சிக்னல் அருகே சிவகாமி  தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக சிவகாமி சம்பவ இடத்தில் நின்று கொண்டிருந்த போது அந்த வழியே திருவான்மியூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை நோக்கி வேகமாக வந்துக் கொண்டிருந்த கார் ஒன்று சிவகாமியின் மீது மோதியதில், சிவகாமி சாலையின் நடுவே விழுந்தார்.

பெண் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு

அடுத்தடுத்து சுதாரிப்பதற்குள், அதே சாலையில், நீலாங்கரை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி ஒன்று சிவகாமி மீது ஏறி இறங்கி விட்டு, நிற்காமல் சென்று விட்டது. இதில் சிவகாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதன் பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சிவகாமி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக அடையாறு போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து முகலிவாக்கத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் அஸ்வந்த் (25) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்படுத்தி விட்டு, நிற்காமல் தப்பிச் சென்ற ய லாரி ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதிகாலை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தூய்மைப் பணியாளர் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சக ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web