விவசாய சங்க தலைவர் படுகொலை.. சரணடைந்த சிறுவன் அதிர்ச்சி வாக்குமூலம்..!

 
சண்முகசுந்தரம்

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேயுள்ள எம்.ஆர்.பாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்தார். இவர் விவசாயத்துக்காகவும், விவசாயிகள் வாழ்வாதாரத்துக்கும் போராடி வந்தார். மேலும், பட்டியல் சமூக மக்களுக்கான பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக பிரச்னைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துவந்தார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று நள்ளிரவு வீடு புகுந்து சண்முகசுந்தரம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முதல்கட்ட விசாரணையில் அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, ஒரு கும்பல் வெட்டிசாய்த்தது தெரிய வந்தது. 

சண்முகசுந்தரம்

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கை ரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணையை தொடங்கினர். சம்பவம் இடத்தில் மர்ம நபர்கள் விட்டு சென்ற தடயங்கள் கைப்பற்றி கை ரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விவசாய சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் கொலையில், சிறுவன் ஒருவன் கீழப்புலிவார் சாலையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்ல நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சைக்கிளில் சென்றபோது சண்முகசுந்தரம் தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டியதால் கொலை செய்ததாக அச்சிறுவன் வாக்குமூலம் அளித்தார்.

சண்முகசுந்தரம்

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இதனை போலீசார் நம்பவில்லை என கூறப்படுகிறது. சண்முக சுந்தரத்தை சிறுவன் மட்டும் தனியாக வெட்டி படுகொலை செய்திருக்க வாய்ப்பில்லை என கருதப்படுகிறது. எனவே இது தொடர்பாகவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web