ஊர் முழுவதும் கடன் வாங்கிய தந்தை.. அவமானத்தில் தாய், மகன் தற்கொலை!

 
மும்தாஜ்

வேலூர் மாவட்டம் எரிகுத்திமேடு பகுதியை சேர்ந்தவர் அன்சார் (வயது 52). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மும்தாஜ் (48). இவர்களுக்கு நஸ்ரின், ஹபிஹா என்ற 2 மகள்களும், இம்ரான் (28) என்ற மகனும் உள்ளனர். அனைவரும் திருமணமானவர்கள். இம்ரான் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். அவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு அர்ஷியாமா என்ற மனைவியும், அபன் என்ற ஒரு வயது மகனும் உள்ளனர். அர்ஷ்யாமா தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

தற்கொலை

அன்சார் மற்றும் அவரது மனைவி மும்தாஜ் இருவரும், பேரணாம்பட்டு, குடியாத்தம், ஆம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இயங்கி வரும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் மகளிர் குழுக்களில், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் ரூ.28 லட்சமும், தனியார் நிதி நிறுவனங்களில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரமும் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தக் கடனை அடைக்க உள்ளூர் நிதியில் கடன் வாங்கி உள்ளனர். அதிக கடன் வாங்கியதால், கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மும்ராஜ், இம்ரான் இருவரும் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இது தொடர்பாக பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் ஒருவர் அன்சாரின் வீட்டுக்குச் சென்று கடனை திருப்பித் தருமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்து போய் அவர் வெளியில் சென்றார். இம்ரானின் மனைவி அர்ஷியாமா கர்ப்பமாக இருப்பதால், குழந்தையை மருத்துவ பரிசோதனைக்காக தனது தந்தை குலாபுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் சிறுகடன் நிறுவன ஊழியர் கடனை திருப்பி செலுத்துமாறு கூறி கதவை தட்டிய்தால் மும்தாஜ் அவமானப்பட்டு மனமுடைந்துள்ளார்.

தற்கொலை

இதில் தாய் மும்தாஜ், மகன் இம்ரான் ஆகியோர் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலைக்கு முன், இம்ரான் தனது தாய் மும்தாஜ் அழும் வீடியோவை வெளியிட்டார். அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. அப்பா அன்சார் எங்கெல்லாம் காட்டி கடன் வாங்கினார். கடனை செலுத்த முடியவில்லை. பதில் சொல்ல முடியாது. அப்பா அன்சார் பெட்ரோல் வாங்கி வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினார். ஆனால், அவர் திரும்பி வரவில்லை என அழுதுகொண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டு, தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web