மகளை கர்ப்பமாக்கிய தந்தை.. 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

 
கர்ப்பிணி மாணவி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தனது 12 வயதான வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கி கொடுமை செய்து வந்த தந்தை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 6ம் வகுப்பு படித்து வரும் வளர்ப்பு மகள் என்றும் பார்க்காமல், மனிதன் மிருகத்தை விட கேவலமாக நடந்து கொள்கிற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீபத்தில் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் 12 வயதேயான பள்ளி  மாணவி. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சிறுமி 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் தந்தை இறந்து விட்டார். அதன் பின்னர், 29 வயது கம்பி கட்டும் தொழிலாளி ஒருவரை சிறுமியின் தாயார் மறுமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர், சிறுமி மற்றும் அவரது தாயாருடன் சேர்ந்து வசித்து வந்தார். சிறுமியையும் வளர்ப்பு தந்தை போல் கவனித்து வந்தார். 

rape

இந்நிலையில், திடீரென சிறுமி தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துல்ளார். கடுமையாக வயிறு வலிப்பதாக சிறுமி தொடர்ந்து கூறியதையடுத்து, சிறுமியின் தாயார் தன்னுடைய மகளை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவர்களின் பரிசோதனையில் சிறுமி 3 மாத ம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

பின்னர், சிறுமியிடம் தாயார் தனிமையில் பேசி, விசாரணை நடத்தினார். அப்போது தன்னை வளர்ப்பு தந்தை பாலியல் பலாத்காரம் செய்ததால் தான் கர்ப்பம் அடைந்ததாக சிறுமி தெரிவித்தாள். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், ஓசூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

arrest

புகாரின் பேரில், போலீசார் போக்சோவின் கீழ் வழக்குப் பதிவு செய்து வளர்ப்பு தந்தையை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web