சேர்ந்து வாழ மறுப்பு - மருமகளை வீடு தேடிச்சென்று வெட்டி வீசிய மாமனார் !!

 
அன்பு

தூத்துக்குடி தாளமுத்து நகர் நேரு காலனி பகுதியில் மகாராஜன்(37) - அன்பு (32) தம்பதி வசித்து வந்தனர். இத்தம்பதியினருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

மகாராஜன் - அன்பு தம்பதி இடையே அவ்வப்போது சிறுசிறு தகராறு ஏற்பட்டு வந்தது. ஒருகட்டத்தில் தகராறு முற்றிய நிலையில், கடந்த ஆண்டு மகாராஜனுக்கும், அன்புவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

அன்பு

இதனால் அன்பு பக்கத்து கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குக் குழந்தைகளோடு சென்றுவிட்டார். அவரைத் தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு, கணவன் மகாராஜன் நேரில்சென்று சமரசம் செய்து வீட்டுக்கு அழைத்தனர். ஆனால், அன்பு அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. 

இதனால் கோபம் அடைந்த மகாராஜன் மற்றும் அவரது தந்தை சுடலைமுத்து(66) இருவரும் அன்புவின் தந்தையின் வீட்டிற்குச் சென்று அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அன்புவை அக்கம்,பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.

அன்பு

பின்னர் தாக்குதல் குறித்து அன்பு கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவர் மகாராஜன், மாமனார் சுலைமுத்து ஆகிய இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர். ஒன்றாக சேர்ந்நது வாழ மறுத்த இளம்பெண்ணை கணவனும், அவரது தந்தையும் சேர்ந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web