100 பயணிகளின் உடைமைகளை விமான நிலையத்திலேயே விட்டுச் சென்ற ப்ளைட்... பயணிகள் கடும் அவதி!
சாலைகளில் போக்குவரத்து நெரிசல் போல் வானில் விமானநெரிசல் வரும் காலம் வெகுவிரைவில் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு சென்ற வண்ணம் உள்ளது. விமானத்தில் குறிப்பிட்ட அளவு எடையை மட்டுமே எடுத்து செல்ல முடியும். அந்த வகையில் ஒரு பயணி அதிகபட்சமாக 40 கிலோ முதல் 50 கிலோ கொண்டு செல்லலாம். நேற்று பிற்பகல் மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு சென்ற விமானத்தில் அதிக எடை இருப்பதாக கூறி 100 பயணிகளின் உடமைகளை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற சம்பவம் நடந்தது. மதுரையில் இருந்து தினமும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை துபாய்க்கு நேரடியாக இயக்கப்பட்டு வருகிறது. துபாயிலிருந்து 188 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் நேற்று பிற்பகல் 12:30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து 192 பயணிகளுடன் மீண்டும் துபாய் புறப்பட்டு சென்ற விமானத்தில் எடை அதிகமாக இருந்தது. விமானத்தின் அதிக எடை காரணமாக 92 பயணிகளின் உடமைகள் மட்டும் விமானத்தில் ஏற்றப்பட்டு விட்டது. மீதமுள்ள 100 பயணிகளின் உடமைகளை கொண்டு செல்ல முடியாத சிக்கலான சூழல் உருவானது. இதன் காரணமாக 100 பயணிகளின் உடைமைகள் மதுரை விமான நிலையத்திலேயே விட்டு செல்லப்பட்டது. விமானத்தில் ஏறிய பிறகு பயணிகளுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். துபாயில் இருந்து வெளியே செல்ல பணம் உட்பட முக்கிய ஆவணங்கள் மற்ற உடமைகளில் இருப்பதாகவும், நீண்ட தூரம் பயணிப்பதால் உடமைகளுக்காக காத்திருக்க வேண்டுமா என பல விமானப் பயணிகள் கேள்வி எழுப்பினர். விமான நிறுவனம் பயணிகளின் தேவைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட 100 பயணிகளின் உடைமைகள் நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டு வந்து வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பயணிகளின் உடமைகளை ஸ்பைஸ்ஜெட் நிறுவனமே பத்திரமாக துபாய் சென்ற பயணிகளின் உடைமைகளை வீட்டிற்கு கொண்டு சேர்ப்பதாக உறுதி அளித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
