நாய்கள் கடித்து குதறிய சிறுமிக்கு 9ம் தேதி அறுவை சிகிச்சை!
![நாய்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/a2eafc37263de2f87188168531ff2a9b.png)
சமீபகாலமாக நாய்க்கடியால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெயில் அதிகரிக்கும் காலகட்டத்தில் வளர்ப்பு நாய்களுக்கு வெறி பிடிக்கும் என்கின்றனர் விலங்கு மருத்துவர்கள். இவைகளுக்கு தக்க நேரத்தில் தடுப்பூசி போட வேண்டும். இந்நிலையில் சாலையில் உள்ள பூங்கா காவலாளியின் 5 வயது மகளை 2 வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.
பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த காவலாளியின் மகள் சுதக்ஷாவை, புகழேந்தியின் 2 வளர்ப்பு நாய்கள் திடீரென கடித்துக் குதறின. சிறுமி அலறியதைக் கேட்டு அவரது தாய் ஓடி வந்தார். அவரையும் நாய்கள் விட்டுவைக்கவில்லை எனத் தெரிகிறது. படுகாயம் அடைந்த சிறுமி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 5 வயது சிறுமியை கடித்துக் குதறிய ராட்வில்லர் வகை வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் நாய் கடித்து படுகாயம் அடைந்த சிறுமிக்கு மே 9ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் இருந்து மருத்துவர்கள் வர வேண்டி இருப்பதால் வியாழக்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்படும். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது நன்றாக இருப்பதாகவும், உயிருக்கு ஏதும் ஆபத்தில்லை எனவும் சிறுமியின் தந்தை தகவல் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!