தடுப்பு சுவரில் மோதிய அரசு பேருந்து!! உருண்டு ஓடிய சக்கரங்கள்!! 10 பேர் படுகாயம்!!
ஆந்திராவின் சித்தூர் பகுதியில் 30 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. சென்னை - ஆந்திரா தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரின் மீது மோதியது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சிமெண்ட் கான்கிரீட் சுவரில் மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்தில் பேருந்தின் முன்னால் இருந்த 2 சக்கரங்கள் மற்றும் என்ஜின் பாகங்கள் முழுவதுமாக சேதமடைந்தது. அத்துடன் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் 4 பேர் உயர் சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் முதலில் காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்து பின்னர் கான்கிரீட் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான அரசு பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலை விரிவுபடுத்தப்படாமல் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதால் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதனை முதலில் சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!