வைரல் வீடியோ... தீவிபத்து நடந்த வீட்டின் கதவை உடைத்து 6 பேரை காப்பாற்றிய காவலர்...!
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தின் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பகுதிகளில் ஒன்று பஞ்சகுட்டா. இங்கு அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் 6வது தளத்தில் இன்று காலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது.இந்த தீவிபத்தில் 6 வது தளத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சிக்கிக் கொண்டனர். தீ மளமளவென பரவியதால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை.
@TelanganaDGP @CPHydCity Fire at punjagutta Limits good job by Traffic Constable Shravan Kumar HATS OFF to this Brave Constable. pic.twitter.com/uXxYw0XXh3
— Shakeel Yasar Ullah (@yasarullah) December 22, 2023
கட்டிடத்தின் மாடியிலிருந்து புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போக்குவரத்து காவலர் ஷரவண்குமார், அப்பகுதி மக்களுடன் இணைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டார். அப்போது காவலர் ஷரவண்குமார், கையில் கிடைத்த சிறிய கட்டை ஒன்றை கொண்டு மூடியிருந்த கதவை மேலும், கீழுமாக தட்டி உடைத்தார்.
தைரியத்துடன் வீட்டினுள்ளே சென்று அங்கு சிக்கியிருந்த குடும்பத்தினர் 6 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!