ஹேண்ட் ஷேக்கால் இளைஞர் பலி ... அதிர்ச்சி பின்னணி!

 
பாண்டி - இந்திரா சிங்

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் இந்திரா சிங். இவர் கோவை துடியலூர் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். அவர் தனது ஊழியர்களான மோகன்குமார் சர்மா, மசூத் அகமது, முகமது கலீல், சுமன்குமார் முன்னா மற்றும் 17 வயது சிறுவனுடன் தனது எஸ்யூவியில் கோத்தகரி - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வியூ பாயின்ட்டுக்கு சென்றார்.

இதற்கிடையே பட்டுக்கோட்டையை சேர்ந்த பாண்டி, தனது நண்பர்கள் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த அருண்குமார், சரவணம்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் அதே பகுதிக்கு சென்றனர்.

இரு தரப்பினரும் பரஸ்பரம் அறிமுகமானவர்கள். ஒருவருக்கொருவர் கைகுலுக்கும் போது, இந்திரா சிங் பாண்டியின் கையை கொஞ்சம் வலுவாக குலுக்கியதாக கூறப்படுகிறது. வலியால் துடித்த இந்திரசிங்கை பாண்டி திட்டினார். இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் பாண்டியும் நண்பர்களும் கிளம்பியுள்ளனர். பாண்டி இருசக்கர வாகனத்தில் சென்றார். இவர்களது ஸ்கூட்டர் முனியப்பன் சாலை அருகே சென்றபோது, எஸ்யூவியும் அங்கு சென்றது.

காரை இந்திரசிங் ஓட்டினார். சிறிது நேரத்தில் பாண்டி ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது கார் மோதியது. இதில் பாண்டி உள்ளிட்ட நண்பர்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர். அப்போது, ரிவர்ஸ் கியரில் வேகமாக சென்ற அவர், பாண்டி மீது காரை மோதியுள்ளார். இதில் பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர்கள் அருண்குமார், வசந்தகுமார் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திராசிங் உள்பட 6 பேரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

 லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web