மனைவி கதறல்... ரயிலில் ”தலாக்” சொல்லி கணவர் தப்பியோட்டம்!

 
தலாக்

 ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் வசித்து வருபவர் 26 வயது  இளம்பெண் அப்சனா. இவர்  கல்லூரி படிப்பை நிறைவு செய்துள்ளார்.   மத்தியப்பிரதேச மாநிலத்தில் போபாலில் பணிபுரிந்து வரும் 28 வயது அர்சத்துடன்  பழக்கம் ஏற்பட்டது.  அர்சத்திற்கும் அப்சனாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் போபாலில் வசித்து வந்தனர்.   அர்சத், அப்சனாவை உத்தரப்பிரதேச மாநிலம் புஹர்யன் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். கணவரின் வீட்டிற்கு வந்த அப்சனாவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

ரயில்

கணவருக்கு  ஏற்கனவே திருமணமாகி வேறொரு மனைவி உள்ளார் என்பது அப்சனாவுக்கு தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அப்சனா  கணவன் மற்றும் மாமியாருடன் சண்டை போட்டார்.  இதனால் ஆத்திரமடைந்த அர்சத் மற்றும் அவரது தாயார் சேர்ந்து அப்சனாவை கடுமையாக தாக்கினார். இந்நிலையில், மோதல் முற்றிய நிலையில்  ஏப்ரல் 28ம் தேதி அப்சனா தனது கணவர் அர்சத்துடன் புஹர்யன் நகரில் இருந்து ரயில் மூலம் போபால் புறப்பட்டார். ரயில் ஏப்ரல் 29ம் தேதி காலை உத்தரபிரதேச மாநிலத்தில்  ரான்சி ஜங்ஷன் அருகே வந்தபோது அர்சத் தனது மனைவி அப்சனாவை சரமாரியாக தாக்கத் தொடங்கினார். ஓடும் ரயிலில் நடந்த இச்சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ரயில்

மனைவியிடம் தலாக், தலாக், தலாக் என 3 முறை கூறிய அர்சத் உன்னை விவாகரத்து செய்துவிட்டேன் எனக் கூறிவிட்டார்.  பின்னர், ரான்சி ஜங்ஷன் அருகே ரயில் வந்தபோது ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த அர்சத் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.  கணவன் ஓடும் ரெயிலில் தனக்கு தலாக் என கூறி விவாகரத்து செய்துவிட்டு தப்பியோடி விட்டதால்  அப்சனா போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

From around the web