மனைவியுடன் தகராறு... வீடு புகுந்து மாமனை 18 இடங்களில் வெட்டிக் கொன்ற மச்சான்! தூத்துக்குடியில் பரபரப்பு!

 
முத்துலட்சுமி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் சிவசூர்யா (25). இவர், அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

திருமணமான பிறகு சிவசூர்யா மது அருந்திவிட்டு வீட்டுக்குவந்து முத்துலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி இதே பிரச்சினை நீடித்ததால் மன வேதனை அடைந்த முத்துலட்சுமி, தனது குடும்பத்தினரிடம் இது பற்றி கூறியுள்ளார். பின்னர் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவசூர்யா மீது புகாரும் அளித்துள்ளார்.

முத்துலட்சுமி

அதனைத் தொடர்ந்து சிவசூர்யா- முத்துலட்சுமி இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். சிவசூர்யா அடிக்கடி முத்துலட்சுமியின் சகோதரருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எனது மனைவியை என்னுடன் சேர்த்துவை என்று கூறி வந்துள்ளளார். நேற்றும் வழக்கம் போல சிவசூர்யா தனது மனைவியின் சகோதரருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த முத்துலட்சுமியின் சகோதரர் வெங்கடேசன், சிவசூரியா வீட்டுக்கு சென்று அவரை தாக்கியுள்ளார். மேலும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு வீட்டை வெளியில் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோனார்.

முத்துலட்சுமி

இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து பார்த்தபோது சிவசூர்யா ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். பின்னர் அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி சிவசூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். சிவசூர்யாவின் உடலில் 18 இடங்களில் அரிவாளால் வெட்டி காயம் இருந்துள்ளது.

வெங்கடேசனை போலீசார் தேடி வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக சகோதரியின் கணவரை அறிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web