செல்போனைப் பறித்த கணவன்... நள்ளிரவில் கொதிக்கும் எண்ணெயை அந்தரங்கப் பகுதியில் ஊற்றிய மனைவி!

 
பாவனா

எப்போ பார்த்தாலும் செல்போனில் யாரிடமாவது பேசிக் கொண்டே இருந்ததால் மனைவியைத் தொடர்ந்து கண்டித்து வந்துள்ள கணவன், அன்றும் வழக்கம் போல செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால், ஆத்திரத்தில் மனைவியின் கையிலிருந்து செல்போனைப் பறித்துள்ளான். உடனே, கணவன் தூங்கிக் கொண்டிருக்கும்  போதும், ஆத்திரம் அடங்காத நிலையில், கொதிக்கும் எண்ணெய்யை கணவனின் அந்தரங்கப் பகுதியில் ஊற்றி அதிர வைத்துள்ளார் மனைவி. மத்திய பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் மாதவி நகரைச் சேர்ந்தவர் சுனில் குமார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவரின் மனைவி பாவனா. கணவன் மனைவிக்கிடையே, மனைவி எப்போதும் செல்போனில் பேசுவது குறித்து அடிக்கடி சண்டை நடந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பக்கத்து வீட்டிலிருக்கும் பெண் சுனிலிடம் வந்து, நீங்கள் சென்ற பிறகு உங்கள் மனைவி என் கணவருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் கண்டிச்சு வையுங்க என்று புகார் கூறியுள்ளார். 

Private parts

இது குறித்து மனைவியிடம் சுனில் விசாரித்த போது, நான் பேசவில்லை என்று கூறியுள்ளார். அதன் பிறகு அடுத்தொரு நாள் வேலை முடிந்து சுனில் வீட்டிற்கு வந்த போது, பக்கத்து வீட்டு இளைஞரிடம் தனது மனைவி பாவனா செல்போனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். சுனில் வீட்டிற்கு வந்த பின்னரும், இவர்களது பேச்சு அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அதன் பின்னர், தனது  மனைவியிடம் அந்த இளைஞனிடம் இப்படி செல்போனில் பேசக்கூடாது என எச்சரித்தார். ஆனால் பாவனா கேட்கவில்லை. இதனால் மிகவும் வெறுப்படைந்த சுனில் பாவனாவின் செல்போனை பிடுங்கி எடுத்து வைத்துக் கொண்டார்.

இதையடுத்து நள்ளிரவு 2 மணியளவில் கணவர் சுனில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, பாவனா எழுந்து கிச்சனுக்கு சென்று சமையல் எண்ணெயை சூடாக்கினார். பின்னர் சூடான எண்ணெயைக் கொண்டு வந்து கணவரின் அந்தரங்க பகுதியில் ஊற்றினார். இதில் அந்த பகுதி 70 சதவீதம் தீக்காயமடைந்துள்ளது. கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி விட்டு, மனைவி பாவனா வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

Police

அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சுனிலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கணவரின் வாக்குமூலத்தின் பேரில் மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் மனைவி பாவனவை தேடி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web