கல்யாணத்துக்கு No சொன்ன காதலன்.. மன உளைச்சலில் விபரீத முடிவு எடுத்த +1 மாணவி!

 
கொலை

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது தொழிலாளி மகள் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்-1 தேர்வெழுதி முடிவுக்காக காத்திருந்தார்.  இந்நிலையில் மாணவியும், அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த மாணவியின் தாய் தனது மகளை கண்டித்துள்ளார்.

காதல்

இதனால் மாணவி மனமுடைந்து காணப்பட்டாள். இதனிடையே மாணவி காதலித்த வாலிபரும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என மறுத்துள்ளார். இதனால் மாணவி கடந்த சில நாட்களாக வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தற்கொலை

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

 
From around the web