5 மணி நேரம் தண்ணீரில் மிதந்த நபர்... இறுதியில் ஷாக்கான போலீசார்... வைரல் வீடியோ!
![தண்ணீரில் மிதந்த நபர்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/dc8ec108b2205cb4d6b7d80d09aae7a2.png)
ஹைதராபாத்தில் ஹனுமகொண்டா எனும் இடத்தில் நீர்நிலை ஒன்று அமைந்துள்ளது. இந்த நீர் நிலையில் ஒரு ஆணின் உடல் 5 மணி நேரமாக மிதந்ததை கண்ட அங்குள்ள பொதுமக்கள் அதிர்ச்சியில் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ஆடாமல் அசையாமல் நீர்நிலையில் மிதந்த அந்த நபரை கண்டனர்.அதில் ஒரு போலீஸ் நீர்நிலையில் மிதந்த அந்த நபரின் கையை பிடித்து இழுத்தார். சட்டென தண்ணீரில் மிதந்த அந்த நபர் தலையை திருப்பி பார்த்தார்.
చెరువలో శవం..!
— ABP Desam (@ABPDesam) June 11, 2024
చూస్తే తాగి పండిండు అంటా..!#drunkedman #hanumakonda #floatinginpond #viralvideo #abptelugunews #abpdesam #telugunews pic.twitter.com/50J7Efci8a
அதிரிச்சியில் ஆழ்ந்த போலீசார் அவரை கரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அருகில் உள்ள கிரானைட் குவாரிகளில் தான் வேலை செய்து வருவதாக தெரிவித்தார். வெயிலின் கொடுமையை தணிக்கவே நீர்நிலையில் இப்படி படுத்திருந்ததாக கூறினார். இது குறித்த வீடியோ வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!