மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சி... ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்த அமைச்சர்!

 
திருவள்ளுர்


திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டையில் அரசினர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில்  செவ்வாப்பேட்டை சுற்றுவட்டார  பகுதியில் வசித்து வரும்  திரளான மாணவிகள் கல்வி படித்து  வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக சீண்டியதாக புகார் எழுந்தது.  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கு இது குறித்த புகார்கள் சென்றது.

திருவள்ளுர்


 இதனைத் தொடர்ந்து ஜூலை 1ம் தேதி  ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் செவ்வாப்பேட்டையில் உள்ள பள்ளிக்கு வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தினார். மேலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையினர் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குட் டச், பேட் டச்  நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து விளக்கமாக வகுப்புகள் நடத்தப்பட்டன.  
இதில் 6 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.  அங்கிருந்த சில மாணவிகள் கணித ஆசிரியர் ஜெகதீசன், அறிவியல் ஆசிரியர் பிரேம்குமார் ஆகிய இருவரும் மாணவிகளிடம் தவறாக நடந்தனர்.

திருவள்ளுர்

கை வைத்து நடந்து கொண்டதாக புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜூக்கு அறிக்கை பெறப்பட்டது. இதை தொடர்ந்து, ஆதிதிராவிடர்நலத்துறை  பள்ளிக் கல்வித் துறை இயக்குனரகம் மூலம்   உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் 2 ஆசிரியர்களும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web