தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி... வீட்டு வாசலில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு.. ஐசியூவில் சிகிச்சை!

 
பாமக சங்கர்

கடலூர் மாவட்டத்தில் வீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்த பாமக நிறுவனர் சங்கரை இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினர். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து சரிந்து விழுந்த சங்கர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்கின்ற சிவசங்கர் (43). கடலூர் நகர முன்னாள் வணிகர் சங்கத் தலைவரான இவர் அந்த பகுதியில் கேபிள் டிவி தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று பிற்பகல் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது இருச்சகர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் இவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆம்ஸ்ட்ராங்

கழுத்து, வாய், முதுகு என பல்வேறு பகுதிகளிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வண்டிப்பாளையம் பகுதியில் ஒரு கொலை சம்பவம் நடந்தது. நேற்று இரவு சென்னையில் வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைச் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது பாமக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓட, ஓட வெட்டி கொலை

சங்கரின் ஆதரவாளர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்து வருவதால், கடலூரில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு மருத்துவமனையிலும் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web