கல்லூரி மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம்... கர்ப்பமாக்கி ஏமாற்றிய இளைஞரை வளைத்து பிடித்த போலீசார்!

 
இளம்பெண்

நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள தொட்டன்னி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், திருப்பூர் அவிநாசியில் உள்ள கல்லூரியில் பாலிடெக்னிக் படிப்பு படித்து வந்தார். தற்போது விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். வீட்டில் இருந்த மாணவி கடந்த 30ஆம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி தற்கொலை விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் மாணவி தற்கொலை குறித்து பெற்றோர், உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. மாறாக அங்குள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். அதன் பின்னர் வீட்டில் இருந்த பெற்றோர், மாணவியின் உடைமைகளை எடுத்து பார்த்தனர்.

இளம்பெண்

அந்த வகையில், இறந்த மாணவியின் சகோதரி மற்றும் பெற்றோர் வீட்டின் பீரோவில் இருந்த செல்போனை எடுத்து பார்த்தனர். அப்போது மாணவி, பக்கத்து வீட்டில் வசிக்கும் லாரி ஓட்டுநரான நந்தகுமார்(32) என்பவருடன் அடிக்கடி பேசியிருப்பது தெரிய வந்தது. அதன் பின்னரே அவர்கள் சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசில் புகார் அளித்தனர்.

பின்னர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில், மாணவியும், நந்தகுமாரும் காதலித்து வந்தது தெரிய வந்தது. இதனால் இருவரும் நெருங்கி பழகினர். மேலும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்ததால் மாணவி கர்ப்பமாகி விட்டார். இதையடுத்து மாணவி, நந்தகுமாரை தொடர்பு கொண்டு தான் கர்ப்பமாக இருப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

ஆனால் நந்தகுமார் திருமணத்துக்கு மறுத்து விட்டார். என்னுடன் உல்லாசமாக இருந்து விட்டு, கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்யாமல் இருந்தால் எப்படி என மாணவி பேசியுள்ளார். ஆனால், நீ வேறு சாதி, நான் வேறு சாதி. எனவே திருமணம் செய்து கொள்ள முடியாது என நந்தகுமார் திட்டவட்டமாக மறுத்து விட்டார். 

எனினும் மாணவி திருமணத்துக்கு வற்புறுத்தியதால், காதலிக்கும் போது இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை மாணவிக்கு அனுப்பி மிரட்டி உள்ளார். சில நாட்களாகவே மனவேதனையுடன் இருந்தத மாணவி, வீட்டில் தனியாக இருந்த போது தற்கொலை செய்துக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இளம்பெண்

இதையடுத்து போலீசார் மாணவி கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை அறிய புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யதனர். மருத்துவர்களின் அறிக்கையில் மாணவி கர்ப்பமாக இருந்தது உறுதியானது. பின்னர் மாணவியின் உடல் மீண்டும் அங்கேயே புதைக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் மாணவியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த நந்தகுமாரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web