விஷ ஊசி செலுத்தி போலீஸ்காரர் அடித்து கொலை... போதையில் தொடரும் பயங்கரங்கள்!

 
விஷால்

 

தானேவில் வசித்து வரும் போலீஸ் கான்ஸ்டபிள்  30 வயது  விஷால் பவார்.  இவர் ஏப்ரல் 28ம் தேதி இரவு 9.30 மணிக்கு புறநகர் ரயிலில் சாதாரண உடையில்  சென்று கொண்டிருந்தார். இவர் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டே  ரயில் பெட்டியின் கதவோரம் நின்று கொண்டு  இருந்தார்.  ரயில் சயான் மற்றும் மாட்டுங்கா ரயில் நிலையங்களுக்கு இடையே  மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்துக்கு அருகே நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் விஷாலின் கையில் இருந்த செல்போனை பறிக்க  முயற்சித்தார். அப்போது செல்போன் கீழே விழவே அந்த நபர் செல்போனை எடுத்துக் கொண்டு ஓடத் தொடங்கிவிட்டார்.

ஊசி

 விஷால் உடனே ரயிலில் இருந்து குதித்து அவரை  துரத்திக் கொண்டு ஓடினார். சிறிது தூரம் சென்றதும்  போதை கும்பல் ஒன்று விஷாலை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்க தொடங்கியது.அத்துடன் நில்லாமல் அவரது முதுகில் விஷ ஊசியையும், வாயில் சிவப்பு நிறத்தில் ஒரு திரவத்தையும் ஊற்றி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.  இதில் மயங்கி கீழே விழுந்த விஷால் அடுத்த நாள் காலை தான் கண் விழித்தார். தட்டுத்தடுமாறி வீட்டுக்கு வந்து சேர்ந்த விஷால் மிகவும் சோர்வாக காணப்பட்டார்.

உத்தரபிரதேச போலீஸ்

இதையடுத்து குடும்பத்தினர் அவரை தானேவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஷால் கடந்த புதன் கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இச்சம்பவம் குறித்து போலீசில் விஷாலின் குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து போதை கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். போலீசையே சுற்றி வளைத்த போதை கும்பல் விஷ ஊசி செலுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!