தொடரும் சோகம்... வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் துடிதுடித்து கர்ப்பிணி பலி...!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாவடியூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மகன் ரமேஷ். இவர் ஜேசிபி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி பகுதியில் வசித்து வரும் மாது மகள் ஹேமலதாவுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சுகப்பிரசவத்தின் காரணமாக 2 வயதில் மெய்யழகன் என்ற ஆண் குழந்தை உள்ளது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஹேமலதா இன்று காலை வயிற்று வலி அதிகமாக இருப்பதாக கூறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக வந்துள்ளார்.
அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. உடனடியாக மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து விடுங்கள் எனக் கூறியுள்ளார். இதனை ஏற்காமல் மருத்துவமனையில் அனுமதி பெறாமல் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதன் காரணமாக ஹேமலதாவிற்கு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்சில் இருந்த அவசர மருத்துவ உதவியாளர்கள் ஹேமலதாவின் தொப்புள் கொடியை துண்டித்துள்ளனர். பெண் வீட்டார் 108 ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ உதவியாளர்களிடம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்லாமல் முதல் பிரசவம் ஆன குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் நடந்தது .
எனவே அங்கு செல்லுங்கள் எனக் கூறியதன் காரணமாக அங்கிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு ஹேமலதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது என திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஹேமலதா உயிரிழந்தார்.இதனைத் தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க கூறியும் கர்ப்பிணி பெண் வீட்டிற்கு சென்று வீட்டிலேயே பிரசவம் ஆகி அதிக ரத்தப்போக்கின் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!