இன்று திருநங்கைகளுக்கு தாலி கட்டும் பூசாரி... கூத்தாண்டவர் கோவிலில் கோலாகலம்!

 
கூத்தாண்டவர்

 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில்  கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல்  9ம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 10 ம் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு, சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி கையால் தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் 5ம் தேதி கூவாகம் கூத்தாண்டவர் சித்திரை பெருவிழா!! 

நேற்று அங்கேயே உள்ளூரில் வசிக்கும் திருநங்கைகளுக்கும், இன்று காலை 7 மணி முதல் வெளியூர் திருநங்கைகளுக்கும் தாலி கட்டும் வைபவம்  நடந்து வருகிறது.  அதே போல் இன்று மாலை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டுவார். இன்று இரவு திருநங்கைகள் அனைவரும், தங்களின் கணவரை நினைத்து ஆடி, பாடி மகிழ்ந்து கொண்டாட்டத்துடன் இருப்பர். நாளை ஏப்ரல் 24ம் தேதி  சித்திரை தேரோட்டத்தில்  தேர் வீதியுலா, தெய்வநாயக செட்டியார் பந்தலடிக்கு வந்து சேரும்.  திருநங்கைகள் அனைவரும் தங்களது கணவரை நினைத்து ஒப்பாரி வைத்து அழுது தாலிக் கயிறை அறுத்து அங்கேயே  குளித்து வெள்ளை புடவை அணிந்து கொண்டு சோகத்துடன் தங்களின் சொந்த ஊர் திரும்புவர். ஏப்ரல் 25ம் தேதி  விடையாற்றி உற்சவமும், ஏப்ரல் 26ம் தேதி  தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெறும்.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web