நடுரோட்டில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை.. பொதுமக்கள் அலறி ஓட்டம்!

 
ஜாமீன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாப்பா ஊருணி நாச்சுழியேந்தல் பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு சொத்துக்காக தாயே, மகனை கொலை செய்தார். இந்த கொலையை கூலிப்படையை சேர்ந்த ஒரு கும்பல் செய்துமுடித்தது விசாரணையில் அம்பலமானது. மேலும் கூலிப்படையாக செயல்பட்ட மதுரை திருமோகூரைச் சேர்ந்த வினீத் (29) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், காரைக்குடி தெற்கு காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு காரில் தனது நண்பர்களுடன் காரைக்குடி வந்த வினீத், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.

ஜாமீன்

இதனையடுத்து நேற்று காலை காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக விடுதியில் இருந்து வினீத் கீழே இறங்கினார். அப்போது, அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு அவரை விரட்டியது. இதனை பார்த்த வினீத் தப்பியோடிய போது கால் தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அவரை சூழ்ந்த அந்த கும்பல் வாள், கத்தியால் வெட்டியது. இதை பார்த்த வினீத்தின் நண்பர் ஒருவர், வாளை எடுத்துக் கொண்டு அந்த கும்பலை விரட்டினார். ஆனால் அந்த கும்பல் அவரையும் வெட்டி விட்டு காரில் ஏறி தப்பியது. காலையில் மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் நடந்த இச்சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அலறியபடி சிதறி ஓடினர்.

ஜாமீன்

தகவல் அறிந்து அங்குவந்த போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. ஆனால் அதற்குள் வினீத் உயிரிழந்தார். தொடர்ந்து தனிப்படையினர், அங்குள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஏற்கனவே வினீத் மீது மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் இந்த கொலை பழிக்குப்பழியாக நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 

From around the web