கடலைமிட்டாய் கம்பெனியில் வெடித்து சிதறிய சிலிண்டர்... வானுயர எழுந்த புகைமூட்டம்!

 
தீவிபத்து

 
திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் தனியாருக்கு சொந்தமான கடலைமிட்டாய் தயாரிக்கும் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. திருச்சி ஏ.ஆர்.கே.நகர் 6-வது கிராஸ் பகுதியில் வசித்து வருபவர்  41 வயது சுப்ரமணி. இவருக்கு சொந்தமான 3 மாடி கட்டடத்தில்  தரைத்தளத்தில்  கடலை மிட்டாய் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். முதல் தளத்தில் அவரது வீடு அமைந்துள்ளது. இதில் சுப்பிரமணி, அவருடைய மனைவி மீனாட்சி , மகன்கள் 13 வயது சுப்பையா, 10 வயது ராமநாதன்  , 79 வயது தந்தை  சுப்பிரமணியன், 76 வயது தாயார்  ராமு அம்மாள் தங்கியிருந்தனர்.  

கடலைமிட்டாய்

நேற்று அவரது உறவினரின் மகன் 10 வயது சஞ்சயும் வீட்டில் இருந்தார்.  இரவு 12:30 மணி வரை சுப்பிரமணி கடலை மிட்டாய் தயாரிக்கும் தரைத்தளத்தில் இருந்தார்.  அதன் பிறகே முதல் மாடியில் உள்ள வீட்டுக்கு சென்று தூங்கினார்.
நள்ளிரவு 1 மணிக்கு  அளவில் கடலை மிட்டாய் தயாரிக்கும் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறத் தொடங்கியது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக திருச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.  சம்பவ இடத்திற்கு செல்வதற்கு சற்று நேரத்திற்கு முன்பு கடலை மிட்டாய் நிறுவனத்தில் இருந்த எல்.பி.ஜி. கியாஸ் சிலிண்டர் பயங்கரமாக வெடித்து சிதறத் தொடங்கியது. இந்த சிலிண்டர் பக்கவாட்டில் வெடித்து  அங்குள்ள வயல்வெளியில் பாய்ந்து விழுந்தது.

தீயணைப்பு வாகனம் தீ நெருப்பு

இந்த கோர விபத்தில்  மாடி இரும்பு படிக்கட்டுகள் சரிந்தன. அருகில் இருந்த  ஆஸ்பெட்டாஸ் கூரையும் தீயில் கருகி பறந்தது.   தரைத்தளம் முழுவதும் தீபரவியதால்  கடும் புகைமூட்டம் அடுத்து மின்தடையும் ஏற்பட்டது.  தீயணைப்பு படை வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்து 3 சிறுவர்கள் உட்பட 7 பேரையும் பத்திரமாக மீட்டனர்.இது குறித்து  “கடலை மிட்டாய் தயாரிப்பதற்கு பாகு காய்ச்சுவார்கள். இந்தப் பாகு காயாமல் இருக்க  இரவில் அடுப்பில் உள்ள அனலை அணைப்பதில்லை. அதே போல் அடுப்பில் இருந்த தீயை அணைக்காமல் சுப்பிரமணி சென்றுள்ளார்.இந்த தீ திடீரென யாரும் எதிர்பாராதவகையில்  பக்கத்தில் இருந்த மரத்தூளில் பற்றி எரியத் தொடங்கி  சிலிண்டருக்கும் பரவி  வெடித்து சிதறி உள்ளது.   சிலிண்டர் பக்கவாட்டு சுவரை உடைத்துக் கொண்டு வெளியேறியதால் பெரும் உயிர்ச்சேதம்  தவிர்க்கப்பட்டது.  இல்லையெனில் கட்டடமே  இடிந்து தரைமட்டமாகியிருக்கும் “ எனக் கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web