சென்னையில் வீசிய பெருங்காற்று... காற்றில் பறந்த அரசு பேருந்தின் மேற்கூரை.. அலறிய பயணிகள்!

 
வெயில்

தமிழ்நாட்டில் மக்களை வாட்டி வதைத்த கத்தரி வெயில் காலம் முடிவுக்கு வந்தது. எனினும் வெயிலின் தாக்கம் மட்டும் குறைந்தபாடில்லை. எனினும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வெப்பத்தை தனித்து வருகிறது. இதனால் மக்கள் ஓரளவுக்கு நிம்மதியாக உள்ளனர்.

அந்த வகையில், சென்னையில் சட்டென வானிலை மாறிய நிலையில், பலத்த காற்றுடன் மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் நன்றாக மழை பெய்தது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தின் சில இடங்களில் புழுதிப்புயல் விசியது. தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் புழுதிகள் கிளம்பி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின.

வெயில்

இதற்கிடையில், பழவேற்காட்டில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்னை மாநகர அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சுழன்று வீசிய சூறைக்காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல், அரசு பேருந்தின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் பெயர்ந்து மேல்நோக்கி பறந்தது. இதனை சிறிதும் எதிர்பார்த்திராத பேருந்து டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

வெயில்

மேலும் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் கூச்சலிட்டனர். பின்னர் பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் அவசரஅவசரமாக கீழே இறங்கினர். அதன்பிறகு வேறு பேருந்தில் பயணிகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம

 

From around the web