22 மாணவர்கள் உயிரிழப்பு... பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

 
பள்ளி கட்டிடம்

 வட மத்திய நைஜீரியாவில் நேற்று 2 மாடி அடுக்குகளைக் கொண்ட பள்ளிக் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 22 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 
பள்ளி கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



பிலேசு மாநிலத்தின் புசா புஜியில் உள்ள செயிண்ட்ஸ் அகாடமி கல்லூரியில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று மாணவர்கள் அனைவரும் வகுப்புகளுக்கு வந்த பிறகு திடீரென பள்ளிக் கட்டிடத்தின் ஒரு பகுதி பலத்த சத்தத்தில் இடிந்து விழுந்துள்ளன. அதிகளவில் மாணவர்கள் பள்ளியில் இருந்ததால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. 
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு குவினரும், சுகாதாரப் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக நைஜீரியாவின் தேசிய அவசரகால மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பள்ளி கட்டிடம்
இந்த விபத்து குறித்து காவல் துறை செய்தி தொடர்பாளர் ஆல்பிரட்  கூறுகையில், “மொத்தம் 154 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களில் 132 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் ” என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!