பயங்கரம்... தந்தையை வெட்டி கொலை செய்த பள்ளி ஆசிரியர்... !!

 
அஸ்வத்குமார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் அக்ரஹாரத்தில் வசித்து வருபவர்   சுப்பாநாயக்கர் மகன் தசரதன். இவர் விவசாயத் தொழில்   செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள். இவரது  மூத்த மகன் அஸ்வத் குமார் .  இவர் பசுவந்தனையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து  வருகிறார். இவரது மனைவி அருணா. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு  2 பெண் குழந்தைகள் . இருவருக்கும் இடையில் ஏற்பட்ட  கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

அஸ்வத்குமார்
இந்நிலையில் தனது மாமனார் வீட்டில் உள்ள தனது இரு மகள்களையும் பார்ப்பதற்காக அஸ்வத் குமார்  மாமனார் வீட்டிற்கு கோபத்துடன் புறப்பட்டுள்ளார்.  கிளம்பும் போதே தனது தந்தையிடம் தனது மனைவி,  குழந்தைகள் வராமல் இருப்பதற்கு தனது மாமனார் ஸ்ரீமன் நாராயணசாமி தான் காரணம், அவரை சும்மா விடமாட்டேன் என  அரிவாளுடன் அஸ்வத்குமார் கிளம்பி சென்றுள்ளார்.  இது குறித்து  தசரதன் தனது மருமகளுக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளார்.  சுதாரித்துக் கொண்ட அவர்கள் வீட்டின் பாதுகாப்பு கதவுகளை மூடிக்கொண்டு உள்ளே இருந்தனர்.

ஆம்புலன்ஸ்


மகனின் பின்னாலே தொடர்ந்து வந்த தசரதன் மகனை தடுத்து சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வர முயற்சி செய்துள்ளார். அப்போது தகவல் சொன்ன காரணத்தினால் தான் கதவை அடைத்து விட்டு உள்ளே இருக்கீறார்கள் என ஆவேசம் அடைந்தார். அஸ்வத் குமார் தான் வைத்திருந்த அரிவாளால் தனது தந்தை தசரதனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தார். 
ரத்த வெள்ளத்தில் சரிந்த தசரதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர்   தசரதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்து  போலீசார் தலைமறைவாக இருந்த அஸ்வத் குமாரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web