போன் வாங்கி தர சொல்லி நச்சரித்த மகன்.. தூக்குப்போடுவது போல் நடித்த அம்மாவுக்கு நேர்ந்த சோகம்!

 
சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை செல்லாயி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 49). இவரது மனைவி பழனியம்மாள் (39). இவர்கள் பால் வியாபாரம் செய்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் லெனின் பி.சி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறார். மகள் 10ம் வகுப்பு படிக்கிறாள். இந்நிலையில் லெனின் தனது தாயாரிடம் செல்போன் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

ஸ்மார்ட்போன் செல்போன்

செல்போனை வாங்கி தராவிட்டால் வீட்டை விட்டு வெளியேறி விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அவரது மகன் லெனினை மிரட்டும் வகையில் பழனியம்மாள் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வது போல் நடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலை கழுத்தில் இறுக்கியது. இதை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

கொலை

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பழனியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web