தாய்க்கு தாஜ்மஹால் கட்டிய மகன்!! நெகிழ்ச்சி வீடியோ!!

 
தாஜ்மஹால்

எத்தனை உறவுகள் இருந்தாலும் தாயின் எதிர்பார்ப்பில்லாத அன்பை கொடுத்து விட முடியாது. இதனை உணர்த்தும் வகையில் தாய்க்கு   நினைவில்லம் கட்ட முடிவு செய்தார் மகன். திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியில் வசித்து வருபவர்   அப்துல் காதர். இவரது மனைவி ஜெய்லானி பீவி. இவர்களுக்கு   4 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர். சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வந்த  அப்துல் காதர் குழந்தைகள் சிறு வயதாக இருக்கும் போதே  இறந்துவிட்டார். இதையடுத்து ஜெய்லானி பீவி கடையை நிர்வகித்து குழந்தைகள் அனைவரையும் நல்லப்படியாக படிக்க வைத்தார். அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்து வாழ்வில் நல்ல நிலைக்கு உயர்த்த அரும்பாடுபட்டார். அவரது ஒரே மகனான அம்ருதீன் ஷேக் தாவூத் பட்டப்படிப்பு முடித்து கொண்டு சென்னையில் தொழிலபதிராக உள்ளார். . கஷ்டப்பட்டு பிள்ளைகளை அவர் வளர்க்கபட்டபாட்டை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இதனால் ஜெய்லானி பீவியின் மீது மகன் அம்ருதீன் ஷேக் தாவூத் மற்றும் மகள்கள் அனைவரும் மிகவும் பாசமாக இருந்தனர்.  அம்ருதீன் தனது தாயின் வழிகாட்டுதலின்படியும் அவரிடம் அனுமதி பெற்றே எந்த ஒரு காரியத்தையும் செய்து வந்தார். 


இந்நிலையில்  2020ல்   தனது 72 வயதில் ஜெய்லானி பீவி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தாய் உயிரிழந்த நாள் முதல் அம்ருதீன் ஷேக் தாவூத் அவரது நினைவலைகளால் தத்தளித்து வந்தார். தாயின் மறைவு அவரை மிகவும் வாட்டிய நிலையில், இறந்த தாய்க்கு நினைவு இல்லத்தை கட்ட வேண்டும் என அம்ருதீன் ஷேக் முடிவெடுத்தார்.அதன்படி, திருச்சியில் உள்ள கட்டிட வடிவமைப்பாளர் ஒருவரை தொடர்பு கொண்டு நினைவுச் சின்னத்தை சொந்த ஊரான அம்மையப்பன் கிராமத்திலேயே தாஜ்மஹால் வடிவில் கட்டலாம் என யோசனை தெரிவித்தார். உடனடியாக  நினைவு இல்லம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.   ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்கள் வரவழைக்கப்பட்டு தொழிலாளர்களுடன் பணிகள் தொடங்கின. இரண்டே ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து   ரூ.5 கோடி செலவில் தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம் தயாரானது. நினைவு இல்லத்தின் உள்ளே ஜெய்லானி பீவியின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹால்

இந்த நினைவு இல்லத்தின் திறப்பு விழா ஜூன் 2ம் தேதி  நடைபெற்று பொது மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.  இந்த நினைவு இல்லத்தை எம்மதத்தினரும் வந்து பார்த்துவிட்டு செல்லலாம். 5 வேளை தொழுகை நடத்துபவர்கள் இங்கு தொழுகை நடத்திக் கொள்ளலாம். அதேபோன்று இங்கு செயல்பட்டு வரும் மதரஸா பள்ளியில்  தற்போது 10 மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.  ஜெய்லானி பீவி அமாவாசைக்கு அடுத்த நாள் உயிரிழந்ததால் ஒவ்வொரு அமாவாசைக்கும்   1000 பேருக்கு அம்ருதீன் ஷேக் தாவூது தனது கையால் பிரியாணி சமைத்து அன்னதானம் வழங்கி வருகிறார். சென்னையில் வசித்து வரும் அம்மையப்பன் அமாவாசைக்கு முதல் நாளே சென்னையில் இருந்து வந்து  தனது கையால் பிரியாணி தயார் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார். இறந்த தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகனின் செயல் அப்பகுதி முழுவதும் பெரும்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலக அதிசயத்தில் ஒன்றாக இடம்பிடித்தாலும் தனது தாய்க்காக மகன் கட்டிய தாஜ்மஹாலும்  காலம் காலமாக பேசப்படும் . இது குறித்து அம்ருதீன் ” நினைவு இல்லத்தை ஏராளமானோர் பார்த்து செல்லும் போது இன்னும் தன்னுடன் தாய் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web