வேகமெடுக்கும் HMPV வைரஸ் பரவல்... தமிழக சுகாதாரத்துறை ஆலோசனை!
சீனாவின் பல்வேறு மாகாணங்களில், எச்.எம்.பி.வி., , 'ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்' என்ற வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. சீனாவில் மருத்துவமனைகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த வைரஸ் தொற்றால் பாதிப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. எனினும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 8 மாத ஆண் குழந்தைக்கு எச்.எம்.பி.வி வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் 3 மாத பெண் குழந்தைக்கும் எச்.எம்.பி.வி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த 2 குழந்தைகளுக்கும் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் பெங்களூருவில் வீட்டை விட்டு வெளியில் வரும் போது மாஸ்க் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று உறுதி செய்யபட்ட நிலையில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
எச்.எம்.பி.வி. வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கலாம் என்பதால் வயதானவர்கள், குழந்தைகள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், தலைவலி, சோர்வு, இருமல், காய்ச்சல் அல்லது குளிர் ஆகியவை தொற்றுக்கான அறிகுறிகள் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!