தறிகெட்டு ஓடிய லாரி... திடீரென ஆற்றுக்குள் பாய்ந்த கொடூரம்.. அதிர்ச்சி வீடியோ!
தெலங்கானா மாநிலத்தில் லாரி ஒன்று நேற்று சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு சென்றது. இந்த லாரி நேற்று ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தது.
லிங்காலே அருகே சென்றுக் கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக சென்று முன்னேரு ஆற்றில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இதைபார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக லாரியில் சிக்கியிருந்த டிரைவரை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் ஓட்டுனர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று லாரியை, கிரேன் மூலம் மீட்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
