பேருந்து டயர் வெடித்து பயங்கர தீவிபத்து... அலறித் துடித்த பயணிகள்!

 
மும்பை பேருந்து விபத்து

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை-புனே விரைவு சாலையில் 35 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று புனே நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று காலை 7 மணியளவில் மாவல் தாலுகாவில் உள்ள ஆடே கிராமுக்கு பேருந்து வந்துகொண்டிருந்தது. அப்போது பயங்கர சத்ததுடன் பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதையடுத்து பஸ் குலுங்கியது.

இதனால் பயணிகள் அலறியடித்து பஸ்சில் இருந்து இறங்கினர். சில நிமிடங்களில் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அந்த பகுதியே புகை மூட்டமாக காணப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பேருந்தின் பெரும்பகுதி தீயில் எரிந்து நாசமானது.

பேருந்தில் இருந்த 35 பயணிகளும் சரியான நேரத்தில் இறங்கியதால், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மும்பை-புனே விரைவு சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web