நின்றிருந்த லாரி மீது அதிவேகத்தில் மோதிய வேன்.. 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்!

 
அனந்தபூர் விபத்து

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். நேற்று சத்யசாய் மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் வேனில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளனர். பின்னர், இன்று (டிசம்பர் 21) அதிகாலை சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​புள்ளசமுத்திரம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதியது.

இந்த விபத்தில் ரத்தினம்மா (வயது 70), மனோஜ் (வயது 32), பிரேம் குமார் (வயது 30), அதர்வா (வயது 2) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்த நபர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web