பகீர் வீடியோ.. காதலை ஏற்க மறுத்ததால் கல்லூரி வளாகத்திலேயே இளம் பெண் கொடூர கொலை!
கர்நாடக மாநிலம், ஹுப்பள்ளியில் உள்ள பிவிபி கல்லூரி வளாகத்தில் நேஹா ஹிரேமத் என்ற மாணவி சக மாணவர் ஃபயாஸ் என்பவரால் குத்திக் கொல்லப்பட்டார். காதலை நிராகரித்ததால் ஆத்திரமடைந்த மாணவர், இளம்பெண்ணை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. உயிரிழந்த மாணவி நேஹா ஹிரேமத், பிவிபி கல்லூரியில் எம்சிஏ படித்து வந்தார். குற்றம் சாட்டப்பட்ட ஃபயாஸ் நேஹாவின் முன்னாள் வகுப்புத் தோழர். இவர் சவுதாட்டி தாலுகாவில் உள்ள முனவல்லியை சேர்ந்தவர். கடந்த சில நாட்களாக நேஹாவை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் அவரது காதலை நேஹா ஏற்கவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் நேற்று கல்லூரிக்குள் கத்தியுடன் நுழைந்த ஃபயாஸ் நேஹாவை சந்தித்து தனது காதலை ஏற்குமாறு கூறியுள்ளார். ஆனால் அப்போதும் காதலை நேஹா ஏற்காததால் ஆத்திரமடைந்த ஃபயாஸ், நேஹாவின் கழுத்தில் 7 முறை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டார். கல்லூரி வளாகத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. கல்லூரி அதிகாரிகளும் மற்ற மாணவர்களும் நேஹாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் மருத்துவமனையில் நேஹா இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
Horrifying murder in a Hubballi college where a stalker Fayaz stabbed young Neha to death reportedly after she rejected his proposal pic.twitter.com/d1CPzjVXEI
— Akshita Nandagopal (@Akshita_N) April 18, 2024
இதற்கிடையில், ஹுப்பள்ளியில் உள்ள வித்யாநகர் போலீசாரின் உதவியுடன் போலீசார் ஃபயாஸை கைது செய்தனர். இது குறித்து ஹுப்பள்ளி-தர்வாட் போலீஸ் கமிஷனர் ரேணுகா சுகுமார் கூறுகையில், "பிவிபி கல்லூரியில் எம்சிஏ படித்து வரும் நேஹாவின் முன்னாள் வகுப்பு தோழர் கத்தியால் தாக்கிய சம்பவம் மாலை 4.45-5 மணியளவில் நடந்தது. அவரும் அந்த கல்லூரியில் தான் படித்தார். நேஹாவை 6-7 முறை கத்தியால் குத்தினார். அவர்கள் ஒன்றாகப் படித்ததுள்ளனர், விசாரணைக்குப் பிறகே முழு விவரம் தெரியவரும்.
நேஹாவின் தாய் கீதா ஊடகத்திடம் கூறுகையில், "நான் அவளை அழைத்துச் செல்ல வந்தேன், அவளுடன் தொலைபேசியில் ஒரு முறை பேசினேன், நாங்கள் உரையாடிய ஐந்து நிமிடங்களில், குழப்பம் ஏற்பட்டது, யாரோ கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறினார். நான் அவள் முகத்தைப் பார்க்கவில்லை. என் மகள் இறந்துவிட்டாள் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை." என கதறினார்.
இதற்கிடையில், நேஹாவின் கொலையை கண்டித்து பிவிபி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வித்யாநகர் காவல் நிலையம் முன்பு இந்து ஆதரவு அமைப்புகள் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு கர்நாடக பாஜக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், "காங்கிரஸ் ஆட்சியின் சட்டம்-ஒழுங்கு என்பது வெறும் கனவு. ஹூப்ளி பிவிபி கல்லூரி மாணவி நேஹா ஹிரேமத், ஃபயாஸால் குத்திக் கொல்லப்பட்டார். உங்களின் திருப்திகரமான ஆட்சிக்கு இன்னும் எத்தனை அப்பாவி இந்துக்களை பலி கொடுப்பீர்கள் என்று பதில் சொல்லுங்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்