பகீர் வீடியோ.. 10 ரூபாய் கேட்டதால் ஆத்திரம்.. நிர்வாணமாக சண்டை போட்ட திருநங்கை!
மும்பையில் ரிக்ஷா ஓட்டுநர் 10 ரூபாய் கேட்டதால் ஆத்திரமடைந்த திருநங்கை ஒருவர் ரிக்ஷா ஓட்டுநரை கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதலில் திருநங்கை செல்லும் போது ரிக்ஷா டிரைவர் பணம் கேட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வேகமாக வந்த திருநங்கை டிரைவர் கன்னத்தில் வேகமாக அறைந்தார்.
वो स्त्री है, कुछ भी कर सकती है, पेंट भी उतार सकती है इस लड़की ने ई-रिक्शा वाले को पीटना शुरू किया. जब रिक्शा वाले ने जवाब दिया तो लड़की ने अपना पेंट उतार दिया, इसके बाद फिर पीटने लगे pic.twitter.com/ZOLtWexFGq
— VISHWANATH YADAV (@vnyadav281963) July 4, 2024
இதனால் டிரைவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். திருநங்கை அவரை அடிக்க ஆரம்பித்ததில் தகராறு முற்றியது. அதனால், தன்னை தற்காத்துக் கொள்ள முயன்ற டிரைவரும் தாக்கினார். அக்கம்பக்கத்தினர் சண்டையை நிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் தங்கள் தொலைபேசியில் வீடியோ எடுக்கத் தொடங்கினர். சண்டை முற்றியதால், கோபமடைந்த திருநங்கை தனது ஆடைகளை கிழித்து, டிரைவரை கடுமையாக தாக்கினார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருநங்கை ஒரு பெண் என சமூக வலைதளங்களில் வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது, ஆனால் அந்த பெண் திருநங்கை என்று சமூக வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் நடந்த இடம் இன்னும் சரியாக தெரியவில்லை.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!