பகீர் வீடியோ... தீப்பற்றி எரிந்த பேருந்து... வாக்குப்பதிவு எந்திரங்கள் நாசம்!

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7ம் தேதி என 3 கட்ட தேர்தல் சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 3வது கட்டத் தேர்தலில் உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், அஸ்ஸாம், சத்தீஷ்கர், கோவா, மராட்டியம், கர்நாடகா உட்பட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட 93 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
#WATCH | Madhya Pradesh: A bus, carrying polling personnel, burst into flames while returning from Goula Village in the Multai assembly constituency of Betul Lok Sabha constituency last night. The polling personnel jumped off the bus and were safe. However, four EVMs suffered… pic.twitter.com/wlqMXrlB2z
— ANI (@ANI) May 8, 2024
நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நீடித்தது. வாக்குப்பதிவு நடைபெற்ற 93 தொகுதிகளில் மொத்தம் 64.40 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள கோலா கிராமத்தில் வாக்குகள் பதிவான எந்திரங்களை ஊழியர்கள் பேருந்து மூலம் வாக்கு எண்ணும் மையத்தில் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.
இரவு 11 மணிக்கு திடீரென அவர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக பேருந்தில் இருந்து அனைவரும் வெளியேறியதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் பேருந்தில் இருந்த 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!