கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி... பரபரப்பு வாக்குமூலம்!

 
மங்கள லட்சுமி
 

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை யமுனா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (35). இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மங்களலட்சுமி (30). இவர், பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு தஸ்வந்த் (8) என்ற மகன் உள்ளார்.

ஆம்புலன்ஸ்
 
சீனிவாசன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சீனிவாசன், மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த மங்களலட்சுமி, வீட்டில் இருந்த கத்தியால் கணவரின் வயிற்றில் குத்தினார். படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நசரத்பேட்டை போலீசார், சீனிவாசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.இதையடுத்து நசரத்பேட்டை போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து கணவனை குத்திக்கொலை செய்த மங்களலட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web