பகீர் வீடியோ... பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்.!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனியார் பேருந்து ஒன்றில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். காக்காவேரி பகுதி வளைவில் பேருந்து திரும்பிய தருணத்தில் பேருந்தில் நின்று கொண்டு பயணம் செய்த சாரதா என்ற பெண் எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்துள்ளார் .
#Watch | ராசிபுரம்: வளைவில் திரும்பியபோது பேருந்திலிருந்து தவறி சாலையில் விழுந்த பெண் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி!
— Sun News (@sunnewstamil) July 4, 2024
பலத்த காயங்களுடன் அப்பெண் மருத்துவமனையில் அனுமதி!#SunNews | #Rasipuram | #BusAccident pic.twitter.com/JeWDVPmBkv
பேருந்தில் உடன் பயணித்த மற்ற பயணிகள் கத்திக் கூச்சலிட்டனர். பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டு படுகாயங்களுடன் இருந்த சாரதாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பேருந்தில் நின்று கொண்டிருந்த பெண் நொடி பொழுதில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!