கொட்டும் மழையில் நடனக் கச்சேரியுடன் ”மழை கல்யாணம்” !! வைரலாகும் புகைப்படங்கள்!!
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்பது எல்லாம் அந்த காலத்து பழமொழி. இந்த காலத்தில் சொர்க்கத்தையே முன்னால் கொண்டு வந்து நிறுத்துவது தான் இந்த காலத் திருமணங்கள். எதையும் யோசிக்காமல் ஸ்வீட் எடு கொண்டாடு. எதற்கும் கலங்காதே. யாரையும் யோசிக்காதே. வாழ்வில் ஒரு முறை தான். நம் சந்தோஷம் தான் முழு முக்கியம் என்பது தான் தாரக மந்திரம்.
திருமணத்திற்கு பெண் பார்த்து, நிச்சயதார்த்தம் முடித்து , பத்திரிக்கை அடித்து சொந்தம் பந்தம் என ஊர் முழுக்க விநியோகித்து, திருமண நாளன்று பந்தக்கால் நட்டு தாலி கட்டும் நேரத்தில் ஊரே கூடியிருக்கும் நிலையில் மழை பயங்கரமாக கொட்டித் தீர்த்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்..?திருமணம் நேரத்தில் மழை பெய்தால் அவ்வளவு தான். நம்மாள்க எல்லாரும் பதற்றம் அடைவார்கள். அய்யோ.. உறவினர்களால் வரமுடியாதோ... குறித்த நேரத்தில் தாழிகட்ட முடியாதோ?, திருமணத்தை பிரமாண்டமாக நடத்த முடியாமல் போய்விடுமே என பதற்றம் அடைவார்கள்.
சிலர் திருமணத்தை சில மணி தள்ளி வைப்பார்கள், மழையை திட்டித் தீர்ப்பார்கள். ஆனால் இங்குஒரு இளம் தம்பதி திருமணம் நேரத்தில் பெய்த மழையால் உற்றாகமடைந்தனர். எந்த பதற்றமும் இல்லாமல் மழையிலே திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கான அனைத்து அலங்காரங்கள், மேடைகள், நடனக் குழு, மணமக்கள் என அனைவரும் தயார் நிலையில் இருந்தபோது திடீரென் எதிர்பாரதவிதமாக மழை பெய்துவிட்டது. எனினும் மணமக்கள் இருவரும் பதற்றமடையமால் மழையில் நனைந்தபடியே ஜோடியாக மேடைக்கு நடந்து வந்தனர்.
நடனக் கலைஞர்கள் நடனமாடிக் கொண்டே இருந்தனர். வண்ண விளக்குகள், வான வேடிக்கைகள் என எதுவுமே நிறுத்தப்படவில்லை. நனைந்து கொண்டே மணமேடைக்கு வந்த மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டு தங்களது திருமணத்தை செய்து கொண்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!